கட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்க்கை. ஆனாலும் துணிச்சல் என்பது பிறவிக்குணம் இந்திரா காந்திக்கு. இதுதான் அரசியலில் அவர் அபரிமிதமான வெற்றியைப் பெற்றதற்கும் தோல்வியின் அதலபாதாளத்தில் இருந்து மீண்டதற்கும் காரணம். எமர்ஜென்சி என்ற பெயரில் இவர் ஏற்படுத்திய பிரமிப்பு இன்னமும் அடங்கவில்லை. அதன் எதிரொலியாக இனிமேல் மீளவே முடியாது என்று எதிரிகள் அடித்துச் சொன்னபோது, "முடியும்" என்று சொல்லி அடித்து ஜெயித்தவர் இந்திரா. நம்பமுடியாத வெற்றிகள். நினைத்துப்பார்க்க முடியாத திருப்பங்கள். காட்டாற்று வெள்ளம் போல் பாய்ந்துசெல்லும் வாழ்க்கை அவருடையது.