பத்திரிகையாளர் மாலன் அச்சு ஊடகமாக இருந்தாலும் சரி, இணைய வலைப்பதி வாக இருந்தாலும் சரி, சீரிய கருத்துகளை, நிதானமான நடையில், தர்க்க பூர்வமாக நிறுவுபவர். கடந்த நான்கு ஆண்டுகளில் புதிய பார்வை, சிங்கப்பூர் தமிழ் முரசு, உயிர்மை, தினமணி, இந்தியா டுடே, அவரது வலைப்பதிவு போன்ற இதழ்களில் எழுதிய பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு இது. மாலனின் முந்தைய கட்டுரைத் தொகுப்பான "சொல்லாத சொல்"லைத் தொடர்ந்து இப்போது வெளியாகிறது. 2005 முதல் 2008 வரையிலான தமிழக அரசியல், தமிழ்ச் சமூகம், தமிழ் இலக்கியம், இவற்றுக்குப் பங்களித்த பல்வேறு மனிதர்கள் என அனைவரையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் மாலன். தன் ஜன்னலுக்கு வெளியே அவர் கவனித்தவற்றை, அவரோடு சேர்ந்து நாமும் கவனிக்கிறோம். அவரோடு சேர்ந்து அவரது சிந்தனைகளை நாமும் பகிர்ந்துகொள்கிறோம். இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள் :வானவில் - 25.04.2009online-tamilbooks - 03.05.2009