திருடுபவர்கள் எல்லோருமே கையில் துப்பாக்கியோ, பிச்சுவாக் கத்தியோ வைத்துக்கொண்டு வழிப்பறி செய்வதில்லை. நோகாமல் திருடும் வெள்ளை காலர் ஆசாமிகள் நிறையப் பேர் உண்டு. ஓட்டை கம்பெனியை உருவாக்கி, அதை பங்குச்சந்தையில் ஓடவிட்டு, சில அப்பாவிகளை ஏமாற்றி ஒரு மில்லியன் டாலர் தட்டுகிறான் ஹார்வே மெட்கால்ஃப். அவனால் வஞ்சிக்கப்பட்டவர்கள் ஒரு கணிதப் பேராசிரியர், ஒரு மருத்துவர், ஓர் ஓவிய விற்பனையாளர், ஒரு பண்ணையார். ஒரு பைசாகூடத் திரும்பக் கிடைக்காது என்கிறது காவல்துறை. மோசடி செய்த ஹார்வேயிடமிருந்து, அதே வழியில், அவனை ஏமாற்றி தங்கள் பணத்தைத் திரும்பப் பெற இந்த நால்வரும் திட்டம் தீட்டுகிறார்கள். ஒரு பைசா கூடாமல், ஒரு பைசா குறையாமல். ஜெயிக்கிறார்களா, இல்லை தோற்கிறார்களா என்பதுதான் ஜெஃப்ரி ஆர்ச்சரின் இந்தப் புகழ்பெற்ற கதை.